Skip to main content

எம்.கே.டி. பாகவதர் நினைவுநாளில் அவரது பிறந்த மண்ணில் பாடல்பாடி புகழஞ்சலி

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
p

 

மயிலாடுதுறையில் இருந்து டூவிலரில் திருவாரூர் சென்றுகொண்டிருந்தோம்.  கேனிக்கரை என்கிற இடத்தில் " மன்மதலீலையை வென்றார் உண்டோ"  என்று அந்த கால சூப்பர்ஸ்டாரான எம்கேடி பாகவதர் குரலை போல ஒலித்தது.  வண்டியை நிறுத்திக்கொண்டு பாடல் வந்த திசையை நோக்கினோம்.  அடுத்த பாடலாக " பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர், புண்ணியம் இன்றி விலங்குகள் போல், காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே" என்ற தத்துவார்த்தமான பாடலும் அதே குரலில் ஒலித்த திசையில் சென்று பார்த்தோம்.

 

எம்.கே.டி. தியாகராஜ பாகவதரின் உருவபடத்தை வைத்து கலைத்தாய் அறக்கட்டளையை சேர்ந்த பைசல் தலைமையில் மேடைக்கலைஞர்கள் பாடிக்கொண்டிருந்தனர். இன்று பாகவதர் நினைவுநாள் என்றனர் பாடியவர்கள். 

 

பளபளப்பான சரீரம்,  கருகருத்த கேசம்,  பட்டு சட்டை,  பட்டு வேட்டி, பட்டு துண்டு, ஜவ்வாது பொட்டு,  வைரக்கடுக்கன்,  பத்துவிரல்களிலும் வைர மோதிரம் கனீரென்கிற குரல் என மொத்த உருவமான தியாகராஜபாகவதர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1910 மார்ச் 1 ம் தேதி விஷ்வகர்மா குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மாணிக்கத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தியாகராஜ பாகவதர். இவரது சிறு வயதிலேயே அவரது குடும்பம் பிழைப்புத்தேடி திருச்சியில் குடியேறியது. சிறு வயதில் இருந்தே  படிப்பில் மக்காகவும் இசையில் அதிக ஆர்வமும் கொண்டிருந்தார்.

 

m

 

  பத்தாவது வயதிலேயே திருச்சி ரசிக ரஞ்சன சபாவில் அரிச்சந்திரன் எனும் நாடகத்தில் நடித்து அசத்தினார். நாடகத்தில் நடிக்கும் போது  பாகவதரின் குரல் வளத்தைக் கண்ட வயலின் வித்வான் மதுரை பொன்னுஐயங்கார், இவருக்கு கர்நாடக இசையை கற்றுத்தந்தார். நாடக ஆசானாக அப்போது விளங்கிய நடராஜன் என்பவரிடம் நடிப்புப் பயிற்ச்சியில் ஆறு ஆண்டுகள்  கற்று பிறகு மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார்.

 

முதல் கச்சேரி  4 மணி நேரம் நடந்தது,  அந்த கச்சேரி பல ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்றது. அதோடு அதே மேடையில் இனி இந்த தியாகராஜன், ஒரு பாகவதர்  என விழாவில் மிருதங்க வித்வானாக இருந்த புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகே தியாகராஜ பாகவதர் என அழைக்கப்பட்டது.

 

அதன் பிறகு பல நாடகங்களில் நடித்தாலும் 1926-ல் திருச்சியில் நடத்திய பவளக்கொடி நாடகம் பெரும் புகழை வாங்கித்தந்தது. அந்த நாடகத்தில் அர்ஜுனனாக பாகவதர் நடித்தார். அந்த நாடகம் 1934-ல்  அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த  படத்தில் 55 பாடல்கள் இடம்பிடித்தன, அதில் 22 பாடல்களை பாகவதரே பாடி அசத்தியிருந்தார். அந்த படம் 9 மாதங்கள் ஓடி சாமானியர்களின் மனதிலும் இடம்பிடித்ததோடு தமிழ்த் திரையுலகில் உச்சத்திற்கு சென்றார்.

 

அசுர வேகத்திற்கு தடையாக ஒரு சம்பவம் பாகவதரின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. அது 1944-ல் லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் பாகவதருக்கும் அவரது நண்பரான என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதுவே அவரது சருக்கலுக்கு காரணமாக அமைந்தது. அந்த வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு இருவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்.
பிறகு நீண்ட இடைவேலைக்கு பிறகு 1948-ல் மீண்டும் நடிக்கத்துவங்கினார். ஆனாலும் அந்த படங்கள் ஆரம்பத்தில் வெளியான படங்களைப்போல பெரிதாக வெற்றி பெறவில்லை.  இவரது பாடல்கள் மட்டுமே பிரபலமடைந்தன. நீண்ட சருக்கலுக்கு ஆளாகி வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சந்தித்தார். அவ்வளவையும் கம்பீரமாக எதிர்கொண்டார்.

 

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான  பாகவதரின் ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, ‘3 தீபாவளி கண்ட திரைப்படம்’ என்கிற சாதனையை படைத்தது.

 

 தமிழ்த் திரையுலகின் முடிசூடா சர்க்கரவர்தி என்றும் ஏழிசை மன்னர் என்று புகழப்பட்ட தியாகராஜ பாகவதர் தனது 49 வயதில் உடல்நலக் குறைவால் 1959 ஆண்டு நவம்பர் மாதம் 1 ம் தேதி மறைந்தார். 

 

அவரது புகழையும், நடிப்பையும் இன்றளவும் மேடைக்கலைஞர்கள் வியந்து பாராட்டியும், புகழைப்பாடியபடிதான் இருக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Mayiladuthurai Congress candidate announcement!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை நேற்று (25.03.2024) காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார். 

Next Story

மயிலாடுதுறை தொகுதி யாருக்கு?; மல்லுக்கட்டும் கதர்சட்டை பிரமுகர்கள்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Mayiladuthurai constituency for whom
எஸ்.எம்.பி. துரைவேலன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் மயிலாடுதுறை உள்பட 2 தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல் கட்சியின் தேசிய தலைமை தவித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஒரு வருடத்திற்கு மேலாக களப்பணி செய்து தி.மு.க. கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில் தான் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கியுள்ள நிலையில் அந்த சீட்டுக்காக திருவாரூர் மாவட்டத் தலைவர் மன்னார்குடி எஸ்.எம்.பி. துரைவேலன் பீல்டு அரசியலில் உள்ள எனக்கு தான் சீட்டு வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு 200 க்கு மேற்பட்ட கதர் சட்டைக்காரர்களை அழைத்துச் சென்று விருப்ப மனு கொடுத்துவிட்டு காத்திருக்கிறார். அதே சீட்டுக்காக ராகுல்காந்தி உள்பட டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ள மயிலாடுதுறையில் இருந்து டெல்லியில் இடம்பெயர்ந்துள்ள சிஇஓ பிரவின் சக்கரவர்த்தி டெல்லி அரசியல் மூலமாகவே சீட்டுக்காக போராடிவருகிறார்.

ராகுல்காந்திக்கு நெருக்கமானவராக உள்ளதாக கூறி சீட்டு வாங்கிவிட பிரவின் சக்கரவர்த்தி முயன்று வரும் நிலை அறிந்து திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலனின் மகன் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான பிரவின் தனது தந்தையை டெல்லிக்கே அழைத்துச் சென்று சில நாட்கள் முகாமிட்டு கார்க்கே உள்ளிட்ட தேசிய தலைவர்களை சந்தித்து உள்ளூரிலேயே இருந்து உள்ளூர் மக்களுடன் பழகி மக்களுடன் மக்களாக உள்ள எங்க அப்பாவுக்கு சீட்டு கொடுங்கள். வெற்றி பெற்று இந்திய கூட்டணியின் கரத்தை பலப்படுத்துவோம் என்று நம்பிக்கையாக கூறியுள்ளார்.

Mayiladuthurai constituency for whom
பிரவின் சக்கரவர்த்தி

இதனால் டெல்லியில் உள்ளவருக்கு சீட்டு கொடுப்பதா இல்லை தொகுதியிலேயே இருந்து லோக்கல் அரசியல் செய்பவருக்கு சீட்டு ஒதுக்குவதா என்று கதர்சட்டை தேசிய தலைமைக்கே குழப்பம் நீடிப்பதால் நேற்றைய வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறை விடுபட்டுள்ளது. இதற்கிடையில் மயிலாடுதுறையை எனக்கு கொடுங்கள் என்று திருநாவுக்கரசரும் டெல்லியில் முகாமிட்டுள்ளாராம். இன்று இரவு கூடும் தேசிய தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படலாம் என்ற நிலை உள்ளது. பெரும்பாலும் தொகுதியிலேயே சுற்றி வருபவருக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள் விபரமறிந்த கதர்சட்டைகள். யாருக்கோ சீட்டு ஒதுக்குங்க வேட்பு மனுவுக்கு கடைசி நாள் வரப்போகுது என்கின்றனர் கூட்டணி கட்சியினர்.