Skip to main content

''ஊழல் ஆட்சி துறையாக உள்ளாட்சித்துறை செயல்படுகிறது... வேலுமணிக்கு ஜெயில் உறுதி.''- சிதம்பரத்தில் மு.க ஸ்டாலின் பேச்சு!

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

MK Stalin's speech in Chidambaram!

 

சிதம்பரத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி திமுக சார்பில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கலந்துகொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மக்களிடத்திலும் நேரடியாகச் சென்று கைகொடுத்து வாழ்த்து கூறி குழந்தைகளை செல்ஃபி எடுத்துக் கொண்டு மனுக்களை பெற்று மேடைக்கு திரும்பினார். பின்னர் பதிவு செய்யப்பட்டிருந்த கோரிக்கை மனுக்களை பெட்டியிலிருந்து எடுத்து ஒவ்வொருவரின் குறைகளை பேச வைத்தார்.

 

இதில் உள்ளாட்சித் துறை தொழில்துறை, விவசாயத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட வகைகளில் நடைபெறும் பல்வேறு ஊழல் மற்றும் குளறுபடிகளை  மனுதாரர்கள் கூறினார்கள். இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்களுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யப்படும் என உறுதி கூறினார்.

 

இதனைத்தொடர்ந்து கராத்தே, பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் சாதனை புரிந்த மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் கடலூர் மாவட்டத்திலுள்ள கடலூர் சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஐந்து சட்டமன்ற தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை மனுவாக பெற வந்துள்ளேன். இது மாநாடு போல் பிரம்மாண்டமாக எழுச்சியாக உள்ளது. கடலூர் மாவட்டத்தை திமுக கழக மாவட்டமாக மாற்றியுள்ளார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அவருக்கு வாழ்த்துக்கள். மேலும் பேசுகையில் காலம் கனிந்து வருகிறது. கூட்டணி கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் திமுக அவர்களுக்கு தலையாட்டாமல் தமிழகத்துக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் கேட்டுப் பெற்றது. அ.தி.மு.க., ஆடசியில் பேக்கேஹ் டெண்டர் நடக்கிறது. உள்ளாட்சி துறை இல்லை. ஊழல் ஆட்சி துறை. அந்த துறைக்கு அமைச்சராக  இருந்ததிற்கு நான் வெட்க்கடுகேிறேன். அமைச்சர் வேலுமணி பெயரிலேயே மணி இருக்கு. 

 

அவருக்கு மணிதான் குறிக்கோள். நம்பர் 1 கமிஷன் அமைச்சர் அவர்தான். அவர் சிறைக்கு செல்வது நிட்சயம். தெரு லைட்,துடைப்பம், பிலீச்சிங் பவுடரில் கூட ஊழல். கடலுார் மாவட்ட மழை வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக வல்லுநர்களிடம் பேசி வருகிறேன். பச்சை துண்டு போட்டுக்கொண்டு நானும் விவசாயி என எடப்பாடி விவசாயிகளுக்க துரோகம் செய்கிறார். சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி கிடைக்க செய்வேன். பெண்களுக்கான அனைத்து திட்டமும் தி.மு.க. ஆடசியில் கொண்டு வரப்பட்டது. எடப்பாடி பழனிச்சாயின் அரசு பேரழிவின் உச்சத்தில் உள்ளது. எதற்கும் தகுதியில்லாத உதவாக்கறை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகியுள்ளார்.  

 

MK Stalin's speech in Chidambaram!

 

மக்களுக்காக இரு, மக்களுடன் இரு என்ற அண்ணாவின் வார்த்தைக்கு ஏற்ப பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். ஊழல் நிர்வாக திறமையின்மை மற்றும் அகங்காரம் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் எடப்பாடி ஆட்சி. தி.மு.க., மத்திய அரசில் அங்கம் வகித்த போது பெற்ற திட்டங்களை பெரிய பட்டியலே போடலாம். குறிப்பாக மத்திய அரசின் மொத்த திட்டத்தில் 11 சதவிகிதம் தமிழகத்திற்கு பெற்றுள்ளோம். குறிப்பாக தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, 1553 கோடியில் உருக்கலையை மேம்படுத்தியது, 1650 கோடியில் மதுவரவயல் பறக்கும் சாலை திட்டம் , மெட்ரோ ரயில் திட்டம், கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பட்டியல் போடமுடியாத திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆனால் மத்திய அரசில் இப்போதும் அங்கம் வகிக்கும் எதை கேட்டு பெற்றுள்ளார். எய்ம்ஸ் கொண்டு வந்ததா சொல்ற இவர்கள்  இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்த வைக்கவில்லை. நமக்கு தரவேண்டிய நிதியை கூட கேட்டு பெற முடியாத அரசாக உள்ளது.  இந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு விலக்கு, தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்களுக்க வேலை உள்ளிட்டவைகளை அரசு தடுக்கவில்லை. உதவாக்கரை பழனிச்சாமி தி.மு.கவை குறை சொல்ல அறுகதை இல்லாதவர். அவர் பேச்சை கேட்கவே சகிக்கல. தமிழ்நாட்ட மக்கள் எடப்பாடியை மதிக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்.

 

இந்த நிகழ்வு உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதை குறிப்பாக ஆளும் கட்சியினர் அதிகம் பார்த்து வருகின்றனர். இங்கு கொடுக்கப்படும் கோரிக்கைகளை இரவோடு இரவாக அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதற்காகவாவது இந்த கூட்டம் பயன்படட்டும். இந்த எழுச்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட போகிறது, 5 முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்காத எடப்பாடி அரசுக்கு தழிகத்தில் இடம் கொடுக்கலாமா? எனவே . நுாறு நாளில் ஆட்சி மாற்றும் ஏற்படும் என்றார். இதில் தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் புகழேந்தி, ஐயப்பன், மருதுார் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.