திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைக் காட்டுபவரே நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன், இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உள்ளார். அகில இந்திய அரசியலில் வருகிறவர்கள் எல்லாம், நீங்கள் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும் என கூறுகிறார்கள்.
டெல்லியில் அடுத்தமுறை யார் ஆட்சியில் அமைவது என்பதை நிர்வாகிக்க கூடிய சக்தி மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அவர் யாரை கைக்காட்டுகிறாரோ அவரே நாட்டின் பிரதமர் என்று அவர் கூறினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments