முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (06.07.2021) திருவாரூரில் புதிய மகப்பேறு கட்டடத்தைத் திறந்துவைக்க இருக்கிறார். இதற்காக இன்று மதியம் தனி விமானத்தில் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சை வழியாக திருவாரூர் செல்கிறார். அங்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் 10.5 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல கட்டடத்தை திறந்துவைக்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மு.க. ஸ்டாலின் திருவாரூர் பயணம்!
Advertisment