Published on 12/05/2021 | Edited on 12/05/2021
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க கட்சிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்களையும் அழைத்து தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்க இருக்கிறது தமிழக அரசு.