Advertisment

கலைஞர் சமாதியில் வேட்புமனுவை வைத்து ஆசிப்பெற்ற மு.க.ஸ்டாலின்

stalin

சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கலைஞர் நினைவிடத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார்.

Advertisment

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தணிக்கைக் குழு அறிக்கை தாக்கலாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதன்படி தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திமுக தலைமைக் கழகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம். வேட்புமனுவினை திரும்பப் பெற 27-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 27-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் பதவிக்கு இன்று வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார். இதற்காக, இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கலைஞர் நினைவிடம் சென்ற அவர் வேட்புமனுவை கலைஞர் சமாதியில் வைத்து ஆசிப்பெற்றார்.

mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe