Skip to main content

மு.க.ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் பறக்கும்படையினர் சோதனை

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

 

ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு வாக்கு சேகரிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக  தூத்துக்குடியில் தங்கவிட்டு அங்கிருந்து பிரச்சாரத்திற்கு புறப்படலாம் என்று மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

 

s

 

இந்நிலையில், ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.   கோரம்பள்ளம் பகுதியில் உள்ள சத்யா ரிசார்ட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.  

 

பணப்பட்டுவாடா புகாரால் விடுதியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வாகனங்களில் சோதனை நடைபெறூகிறது என்று தகவல்.  

 

சார்ந்த செய்திகள்