Advertisment

சமூகநீதி நாள் - உறுதிமொழி எடுத்துக்கொண்ட மு.க ஸ்டாலின்!

hj

தந்தை பெரியாரின் 143 பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதியைக் காக்கவும், சாதி வேற்றுமையைக் களையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவரின் பிறந்த தினத்தைத் தமிழக அரசு கடந்த வாரம் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பாராட்டையும் இந்த அறிவிப்பு பெற்றது.

Advertisment

இந்நிலையில் இன்று காலை முதலே அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பாக இன்று காலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ வேலு, ஆ.ராசா, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகள் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisment

periyar periyar statue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe