Skip to main content

கலைஞர் பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம் -மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

ுப


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்த தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தொண்டர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கலைஞர் பிறந்த தினம் தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு சில வேண்டுகோளை முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார்.
 


அதில் "கரோனா தொற்று அச்சம் இருப்பதால் இந்த வருடம் கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினத்தை எவ்வித ஆடம்பரமும் இன்றி கொண்டாட வேண்டும். சென்னையில் கரோனா தொற்று உச்ச கட்டமாக இருப்பதால் கொண்டாட்டங்கள் பாதுகாப்பாகவும், குறைவானதாகவும் இருக்க வேண்டும். மேலும் நான் அஞ்சலி செலுத்த போகும் போது யாரும் கூட்டம் கூடாமல் அவரவர் இருந்த இடத்திலேயே பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். தனி மனித விலகல் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்