தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.கவின் முன்னாள் தலைவருமான அண்ணாவின் 112 -வது பிறந்த நாளை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் தி.மு.கவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வள்ளுவர் கோட்டத்தில் மரியாதை செலுத்தியபின் அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கும் 114 உயர கொடி கம்பத்தில் தி.மு.க கொடியை தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏற்றி,அண்ணா அறிவாலயத்தியல் இருக்கும் அண்ணா உருவப்படத்திற்கும்மலர்தூவி மாரியாதை செலுத்தினார்.