ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள 25 மின் வாகனங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் பசுமை விருதுகள், ஐந்து தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருதும் வழங்கப்பட உள்ளன.
Show comments