Skip to main content

ஜனவரி 3- ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

mk alagiri press meet at chennai

சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு தனது மனைவியுடன் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தயாளு அம்மாளின் உடல் நலத்தை விசாரித்தார். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, "மதுரையில் ஜனவரி 3- ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன். தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. தி.மு.க. தலைமையிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவு எடுக்கப்படும்; அவர்கள் கூறினால் கட்சித் தொடங்குவேன். ரஜினி சென்னை வந்தவுடன் கண்டிப்பாக அவரை நேரில் சென்று சந்திப்பேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்