/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alagiri444.jpg)
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3- ஆம் தேதி மதுரை வர வேண்டும் என்று மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனை கூட்டம் 03/01/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் வரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)