மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்ப்பதற்கு கடைகளை திறக்கக்கோரி வழக்கு!

Mixy, grinder repair shop open issue

கரோனா நோய் பரவலைதொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக,பல வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதடைந்து உள்ளதால், அந்தக்கடைகளை திறக்க வேண்டும் என்றும், அவற்றை ஆன்-லைன் வியாபாரம் மூலமாகவும் விற்க வேண்டும் என்றும், அதற்கான நேரம் மற்றும் காலத்தை மாண்புமிகு உயர்நீதிமன்றமே நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஒரு பொதுநல வழக்கை வழக்கறிஞர் ஜி .ராஜேஷ் என்பவர் தொடர்ந்துள்ளார் .

இன்றைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, மிக விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

covid 19 highcourt lockdown shops
இதையும் படியுங்கள்
Subscribe