Skip to main content

பீகாரில் காணாமல் போன சிறுமி சென்னையில் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம்...தீவிர தேடுதலில் போலீசார்!!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

பீகார் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயதுடைய சிறுமியை சென்னை போலீசார் உதவியுடன் பாட்னா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சஜாதா காதுன் என்ற 15 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் திடீரென காணாமல் போனார். பள்ளிக்குச் சென்ற சிறுமி திரும்பி வராததால் அச்சமடைந்த அச்சிறுமியின் பெற்றோர்கள் பாட்னா போலீசில் புகாரளிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் காணாமல் போன அந்தச் சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த மனிஷா குமாரி என்ற 18 வயது இளம்பெண் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

kidnap


அதனையடுத்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மனிஷா குமாரி சிக்கினார். அந்த ரயிலில்  பயணசீட்டு இன்றி பயணித்த பொழுது பயணச்சீட்டு பரிசோதகரிடம் சிக்கினார் மனிஷா. பரிசோதகர் பயணசீட்டு எடுக்காததால் போலீசில் பிடித்து தருவதாக கூற அதற்கு பயந்த மனிஷா அவரிடமிருந்து தப்பிக்க ரயில் மெதுவாக சென்ற தருணத்தில் அவரின் கவனத்தை திசைதிருப்பி ரயிலில் இருந்து எகிறி குதித்துள்ளார். இதனால் மனிஷா குமாரிக்கு சிறிது காயம் ஏற்பட்டதால் அவர் மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். காயமடைந்த மனிஷா குமாரியை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

kidnap


விசாரணையில் அந்தப் பெண் வெறும் 400 ரூபாய்க்கு அந்த சிறுமியை விற்பனை செய்ததை போலீசாரிடம் தெரிவித்தார். இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை கேட்டு அதிர்ந்த போலீசார் சிறுமி யாரிடம் விற்கப்பட்டது என தீவிரமாக அவரிடம் விசாரித்தனர். சிறுமியை ஏமாற்றி செகந்திராபாத் அழைத்து வந்த மனிஷாகுமாரி அங்கு வைத்து பிரகாஷ் யாதவ் என்பவனிடம் 400 ரூபாய்க்கு விற்றுவிட்டு பின்னர் பாட்னா திரும்புவதற்காக ரயிலில் பாட்னா திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து இறுதியில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

kidnap


இதையடுத்து செகந்திராபாத் சென்ற பாட்னா போலீசார் அங்கு விசாரணை நடத்தியதில் பிரகாஷ் யாதவ் சிறுமியை சென்னை அழைத்து சென்றது தெரியவந்தது. சென்னை போலீசாரின் உதவியை நாடியது பாட்னா போலீஸ்.

மனிஷா குமாரியிடமிருந்து சிறுமியை பெற்ற பிரகாஷ் யாதவின் செல்போன் எண்ணை பெற்று அதனை வைத்து விசாரணை மேற்கொண்ட குற்றவியல் தடுப்பு பிரிவு போலீசார் பிரகாஷ் யாதவ் பெரம்பூரில் இருப்பதை கண்டறித்தனர். இதனையடுத்து தமிழக போலீசாரின் உதவியுடன் பாட்னா போலீசார் பெரம்பூரில் வைத்து பிரகாஷ் யாதவை  கைது செய்தனர்.

 

kidnap


கைது செய்யப்பட்ட பிரகாஷ் யாதவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்திவரப்பட்ட சிறுமியை அன்சாரி என்பவரிடம் ஒப்படைத்ததாக அவன் தெரிவித்துள்ளான். ஆனால் அன்சாரி அதன் பின்னர் அந்த சிறுமியை என்ன செய்தான்,எங்குள்ளான் என்பது குறித்தும் தெரியாது என அவன் கூறியுள்ளான். இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோரும், பாட்னா போலீசாரின் ஒரு குழுவினரும் சென்னையில் முகாமிட்டு சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல் போலீசாரின் மற்றொரு குழுவினர் கைது செய்யப்பட்ட பிரகாஷ் யாதவை  பாட்னா அழைத்துச் சென்று அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.