Skip to main content

தம்பியை கொலை செய்த அண்ணன்! விசாரணையில் அதிர்ச்சியான போலீஸ் டீம்!

Published on 01/08/2019 | Edited on 02/08/2019

விழுப்புரம் மாவட்டம் எலவாசனூர் கோட்டை அருகே காப்பு காட்டில் அயன் குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகன் செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் மாணவனின் உடன் பிறந்த அண்ணன் சந்தோஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சந்தோஷீடன் பிறந்த சகோதரி, சித்தி ஆகிய மூவரை கைது செய்துள்ளது போலீஸ்.

 

Police

தம்பியை கொடூரமாக அண்ணனே ஏன் கொலை செய்தான்? போலீஸ் விசாரணையில் அவன் கொடுத்த வாக்குமூலம் அறுவறுப்பாகவும் முகம் சுளிக்க வைத்தது.
 

சந்தோஷின் சித்தப்பா வேலைக்காக கேரளா சென்றுள்ளார். இவரது மனைவி கரும்பு வெட்டும் தொழிலாளியான சந்தோஷீடன் கரும்பு வெட்ட செல்வாராம். இதனால் நாளடைவில் இருவருக்கும் தகாத உறவு ஏற்ப்பட்டுள்ளது. இதனை தற்செயலாக பார்த்துள்ளான் செந்தில். அண்ணன் மீது ஏதாவது கோபம் வந்தால், சித்தியுடன் உனக்கு உள்ள தொடர்பை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுவேன் என்று செந்தில் அவ்வப்போது சொல்வானாம். இதனால் செந்திலை தாஜா செய்து வந்துள்ளான் சந்தோஷ்.
 

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று காலையிலேயே தனது சொந்த சகோதரியுடன் சந்தோஷ் தகாத உறவில் இருந்ததை செந்தில் நேரில் பார்த்து விட்டு அறுவெறுப்பும் கோபமும் கொண்டான். தன் அண்ணனை பார்த்து, உன் செயலை இனிமேல் சகிக்க முடியாது. இதை நான் அப்பா அம்மாவிடம் கண்டிப்பாக சொல்லப் போகிறேன் என்று சத்தம் போட்டுள்ளான் செந்தில். தம்பியை சாந்தப் படுத்த முடியாமல் தடுமாரிய சந்தோஷ், இது பற்றி சித்தி மற்றும் சகோதரி ஆகியோரிடம் தனிமையில் விவாதித்தான். அதன்படி மூவரும் சேர்ந்து எடுத்த முடிவு அப்பகுதி மக்களையே பதைபதைக்க வைத்துள்ளது. மூவரும் செந்திலிடம் அன்பாக நயந்து பேசியபடியே வனத்துரை காட்டுக்குள் விறகு ஒடிக்க போகலாம் என்று கூட்டி போனார்கள்.
 

ஆள் அரவமற்ற காட்டு பகுதிக்குள் கொண்டு போன மூவரும், செந்திலை பெண்கள் இருவரும் திமிராமல் பிடித்து கொள்ள, ஆட்டை அறுப்பது போல் தம்பியின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க சாகடித்துள்ளான் அண்ணன். பிறகு மூவரும் எதுவும் நடக்காதது போல ஜாலியாக இருந்துள்ளனர்.
 

மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவினை அடுத்து அந்த ஊரில் உள்ளவர்களின் செல்போன் பயன்பாடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். இதன் மூலம் ஐந்து நாட்காளில் கொலையாளிகளை கைது செய்துள்ளது போலீஸ். செல்போன் உரையாடல்களை கண்டுபிடித்துள்ள போலீசுக்கு அந்த பகுதியில் தகாத உறவுகள், கள்ள காதல் விவகாரம் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் பல கிடைத்துள்ளன. மேலும் தோண்ட தோண்ட முகம் சுளிக்க வைக்கும் விவகாரங்கள் அளவுக்கு உள்ளதாம். கொலை வழக்கை மட்டும் கண்டுபிடித்தது போதும் தோண்டி துருவினால் முடை நாற்றம் வீசும் என்கிறது போலீஸ் தரப்பில்.
 

இந்த வழக்கை ஐந்து நாட்களில் கண்டுபிடித்த போலீஸ் படையினர், கள்ளக்குறிச்சி கூடுதல் எஸ்.பி. சரவணன் டிஎஸ்பி ராமநாதன், உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி, மகளிர் இன்ஸ்பெக்டர் விஜி, எடைக்கல் காவல் நிலைய எஸ்ஸை அகிலன், எ.வ.கோட்டை காவல்நிலைய எஸ்ஸை மாணிக்கம், தனிப்பிரிவு ஏட்டுக்கள் மோகன், இளையராஜா ஆகியோர் முன்னிலையில் குற்றவாளிகள் மூவரும் செந்திலை எப்படி கொலை செய்தார்கள் என்ற நிகழ்வுகளை தத்ரூபமாக செய்து காட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.