style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னை, சின்னமலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ஏழுபேரை விடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். அப்போது அருகே இருந்த டீக்கடையில் ஒருவர் அங்கிருக்கும் பாட்டில்களை உடைத்துள்ளார். அதை வீடியோ எடுத்தார், மிர்ரர் நவ் பத்திரிகையாளர் ப்ரமோத் மாதவ். அதைப்பார்த்த அவர் ப்ரமோத்-ஐ தாக்கியுள்ளார். இதனால் அவரின் கண் மற்றும் மூக்கு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் திமுகவை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் திமுக தரப்பு அதை மறுத்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">