தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில்இன்று (04.01.2022) சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கரோனா சிறப்பு சித்த மருத்துவ மையம் திறந்து வைக்கப்பட்டது.

Advertisment

இதனை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் மருத்துவ மையத்தை திறந்து வைத்தனர்.

Advertisment