சென்னை சைதாப்பேட்டையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தேசிய ஊட்டச் சத்து வார விழா நடைபெற்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சீர்வரிசை வழங்கி கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி ஆசீர்வதித்தனர்.