Skip to main content

அமைச்சரின் உத்தரவு... கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

திருப்பத்தூர் மாவட்டம், கரோனா நோய் வந்தவர்கள் அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டம் சிவப்பு பகுதியாக (டேஞ்ஜர்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதுமே 144 தடை உத்தரவு கடுமையாக பின்பற்றப்படுகிறது. வங்கிகள், அஞ்சலகம்கூட செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி தன்ஜீம் ஜமாத் சார்பில் வெளியாகியுள்ள ஒரு அறிக்கை சமூக வளைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 Minister's order ...


அந்த அமைப்பின் லெட்டர் பேடில் உருது மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையில், தன்ஜீம் ஜமாத் நிர்வாகிகள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீலை சந்தித்து லாக்டவுன் காரணமாக நகரம் முழுவதும் அனைத்து கடைகள் மூடி இருப்பதாலும், அடுத்த இரு நாட்களில் ரமலான் மாதம் ஆரம்பம் ஆக உள்ளதால், முஹல்லாகளில் உள்ள கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தர கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் அமைச்சர் நீலோபர் உடனடியாக வட்டாட்சியர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடம் பேசியதாகவும், அதற்கு அதிகாரிகளும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
 

 nakkheeran app



இந்த கடிதம்தான் சமுக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன் அருள் கவனத்துக்கு சென்றதும், அதுபோன்ற அனுமதி ஏதும் வழங்கவில்லை எனக்கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த 13ம் தேதி கோட்டை பகுதியில் ஒரு பெண்ணுக்கு கரோனா நோய் தோற்று உறுதியானது. இதனால் வரும் மே 3ம் தேதி வரையில் லாக்டவுன் தொடரும் என்றும், அதற்குள் எதாவது புதியவருக்கு நோய் தோற்று கண்டறியப்பட்டால், அன்றைய தேதியில் இருந்து ஒரு மாதத்திற்கு மேலும் லாக் டவுன் தொடரும் எனக்கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகு எப்படி இந்த அறிக்கை என நாம் விசாரித்தபோது, தனது சமுதாய மக்களிடம் அமைச்சரின் இமேஜ் டேமேஜ்ஜாக்கியுள்ளது. அதோடு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்காக கரோனா தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை 6 நாட்களிலேயே வீட்டுக்கு அனுப்பி மகிழ்ச்சியாக்கினார். அப்படி அனுப்பப்பட்ட ஒருவருக்கு கரோனா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரம்ஜான் வருவதால் கடைகள் திறக்க வியாபாரிகள் அனுமதிக்க கேட்க, நான் சொன்னா அனுமதி தருவாங்க. நீங்க கவலைப்படாதிங்க, அனுமதி தரச்சொல்றன் எனச்சொல்லி பேசியுள்ளார். அதிகாரிகள் அரசின் உத்தரவை காட்டி மறுத்துள்ளனர். ஆனால், அவர் தன் சமுதாயத்தினரிடம் திறக்கலாம் எனச்சொல்ல, அதுவே அறிக்கை வாயிலாக பாராட்டாக வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது வாணியம்பாடியில்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மின்கம்பம் மீது கார் மோதி விபத்து; 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Accident involving a car hitting a power pole; 6 college students were injured

வாணியம்பாடியில் மின்கம்பம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் பயின்று வரும் கல்லூரி மாணவர்கள் 6 பேர்  கல்லூரி முடிந்து காரில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில்  பயணம் செய்த ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியைச் சேர்ந்த நவ்மான், பெரியாங்குப்பம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நியாமத்துல்லா, கிஷோர், முஜம்மில், வாசிப், புர்கான்  உள்ளிட்ட  மாணவர்கள்  படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் ஆம்பூர் கிராமிய போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் நவ்மான் (19)உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கல்லூரி முடிந்து காரில் வீடு திரும்பியபோது விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.