Skip to main content

அமைச்சரின் உத்தரவு... கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

திருப்பத்தூர் மாவட்டம், கரோனா நோய் வந்தவர்கள் அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டம் சிவப்பு பகுதியாக (டேஞ்ஜர்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதுமே 144 தடை உத்தரவு கடுமையாக பின்பற்றப்படுகிறது. வங்கிகள், அஞ்சலகம்கூட செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி தன்ஜீம் ஜமாத் சார்பில் வெளியாகியுள்ள ஒரு அறிக்கை சமூக வளைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 Minister's order ...


அந்த அமைப்பின் லெட்டர் பேடில் உருது மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையில், தன்ஜீம் ஜமாத் நிர்வாகிகள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீலை சந்தித்து லாக்டவுன் காரணமாக நகரம் முழுவதும் அனைத்து கடைகள் மூடி இருப்பதாலும், அடுத்த இரு நாட்களில் ரமலான் மாதம் ஆரம்பம் ஆக உள்ளதால், முஹல்லாகளில் உள்ள கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தர கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் அமைச்சர் நீலோபர் உடனடியாக வட்டாட்சியர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடம் பேசியதாகவும், அதற்கு அதிகாரிகளும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
 

 nakkheeran app



இந்த கடிதம்தான் சமுக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன் அருள் கவனத்துக்கு சென்றதும், அதுபோன்ற அனுமதி ஏதும் வழங்கவில்லை எனக்கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த 13ம் தேதி கோட்டை பகுதியில் ஒரு பெண்ணுக்கு கரோனா நோய் தோற்று உறுதியானது. இதனால் வரும் மே 3ம் தேதி வரையில் லாக்டவுன் தொடரும் என்றும், அதற்குள் எதாவது புதியவருக்கு நோய் தோற்று கண்டறியப்பட்டால், அன்றைய தேதியில் இருந்து ஒரு மாதத்திற்கு மேலும் லாக் டவுன் தொடரும் எனக்கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகு எப்படி இந்த அறிக்கை என நாம் விசாரித்தபோது, தனது சமுதாய மக்களிடம் அமைச்சரின் இமேஜ் டேமேஜ்ஜாக்கியுள்ளது. அதோடு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்காக கரோனா தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை 6 நாட்களிலேயே வீட்டுக்கு அனுப்பி மகிழ்ச்சியாக்கினார். அப்படி அனுப்பப்பட்ட ஒருவருக்கு கரோனா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரம்ஜான் வருவதால் கடைகள் திறக்க வியாபாரிகள் அனுமதிக்க கேட்க, நான் சொன்னா அனுமதி தருவாங்க. நீங்க கவலைப்படாதிங்க, அனுமதி தரச்சொல்றன் எனச்சொல்லி பேசியுள்ளார். அதிகாரிகள் அரசின் உத்தரவை காட்டி மறுத்துள்ளனர். ஆனால், அவர் தன் சமுதாயத்தினரிடம் திறக்கலாம் எனச்சொல்ல, அதுவே அறிக்கை வாயிலாக பாராட்டாக வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது வாணியம்பாடியில்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.