Advertisment

ஆளுநருடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

Governor

Advertisment

இன்று மாலை தமிழக ஆளுநர் தரும் தமிழ் புத்தாண்டு தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

ஏற்கனவே சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

governor minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe