Skip to main content

அமைச்சர் கல்லூரி தரமற்றது.... பல்கலைகழகம் அறிவிப்பு!!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

மாணவர்கள் படிக்க இயலாத தரமற்ற பொறியியல் கல்லூரிகள் என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு பட்டியல் போட்டுள்ளது. அந்தப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகளில் தரமற்றவை என விவரத்துடன் கூறியுள்ளது. அந்த 89 கல்லூரிகளில் பல முக்கிய விஐபிகள் நடத்தும் கல்லூரிகளும் அடங்குகிறது.

COLLEGE

இதில் குறிப்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சரான கே சி கருப்பனனின் கல்லூரியும் உள்ளது, சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஈரோடு மாவட்டம் பவானி யைச் சேர்ந்தவர். இவர் ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியில் பல கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இன்ஜினியரிங் காலேஜ். 

 

COLLEGE

இந்தக் கல்லூரி தரமற்றவை இதில் மாணவர்கள் சேர்க்கை கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அந்த லிஸ்டில் வருகிறது. ஒரு அமைச்சர் அதுவும் சுற்றுச்சூழல் அமைச்சர் தனது கல்லூரி தரமற்றது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது என்றால் அமைச்சரின் கல்லூரியின் லட்சணம் எப்படி இருக்குமென கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.