இன்று (13.05.21) காலை 6.00 மணிக்கு சென்னை கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் (கிங்ஸ் மருத்துவமனை) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் முழு கவச உடை அணிந்து ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் சட்டமன்ற உறுப்பினர் திரு. வன்னியரசு, சகாய மீனா இ.ஆ.ப. மற்றும் அங்கு சிகிச்சை பெறும் பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் கிங்ஸ் மருத்துவமனை இயக்குநர் மரு. நாராயணசாமி உள்ளிட்டமருத்துவர்கள், செவிலியர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.