தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு வலைதளத்தை துவங்கி வைத்த அமைச்சர்!! (படங்கள்)

தமிழகத்தில் கரோனாவின் பரவல் அரசின் சீரிய நடவடிக்கையால் முன்பைவிட தற்பொழுது மிகவும் கட்டுக்குள் வந்திருக்கிறது. அதே போல் கடந்த மாதங்களை விட இன்றைய தினங்களில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக அரசும் அனைவருக்கும் தடுப்பூசி விரைவாக கிடைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் கட்டிடத்தில் தடுப்பூசி போடுவதற்காக ஆன்லைன் ஸ்லாட் முன்பதிவு வலைதளத்தைதொடங்கிவைத்தார். அப்போது அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தார்.

Chennai gagandeep singh bedi ribbon building
இதையும் படியுங்கள்
Subscribe