ADVERTISEMENT

இரண்டாவது கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்...!

03:11 PM Feb 20, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டாவது கரோனா தடுப்பூசியை (கோவாக்சின்) போட்டுக்கொண்டார். பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்கனவே முதல் தடுப்பூசியை சுகாதர துறை அமைச்சர் சென்னையில் போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தமாக 14,436 பேருக்கு திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை - 13,322. இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் - 1,114. சில மாநிலங்களில் கரோனா எண்ணிக்கை சற்று உயர்ந்திருக்கிறது; ஆனால் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருநாளுக்கு 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT