Skip to main content

நக்கீரன் வெளிக்காட்டிய கால்களை இழந்த இளைஞருக்கு பசுமை வீடு கட்டும் உத்தரவை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்...

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

Minister Vijayabaskar gave the order to build a government green house to puthukottai youth raja

 

 

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம் சம்மட்டிவிடுதி ஊராட்சி மேலவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 26) என்ற இளைஞர் இரு கால்களையும் இழந்து தவித்து வரும் நிலையில், அவரது மனைவி விமலா, அவருக்கு துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். 

 

கழிவறை வசதிகூட இல்லாத குடிசை வீட்டில் வசிக்கும் ராஜாவின் இயற்கை உபாதைகளை மனைவி விமலாவே எடுத்து வருகிறார் என்பதை மக்கள் பாதை மூலம் அறிந்து நக்கீரன் களத்திற்கே சென்று செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டதுடன் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கும் கொண்டு சென்றோம். 

 

உடனடியாக அவருக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் சில நாட்களில் ராஜாவின் வீட்டிற்கே சென்று வீட்டுமனைப் பட்டா வழங்கியதுடன் மேலும் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார் ஆட்சியர் உமாமகேஸ்வரி. மேலும் கால்களை இழந்த கணவரை 4 வருடமாக கவணித்துக் கொள்ளும் மனைவி விமலாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

 

இந்த நிலையில் நக்கீரன் செய்தி மூலம் தகவல் அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு விழாவுக்கு சென்றபோது, நேரடியாக ராஜாவைப் பார்த்து உதவிகள் செய்வதாக உறுதி அளித்திருந்தார். அதேபோல இன்று புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ராஜாவை அழைத்து ரூ. 2.10 லட்சம் மதிப்பிலான பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்கினார். 

 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். நக்கீரன் வெளிக்காட்டிய ராஜாவுக்கு அரசு உதவிகளோடு பல தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நாறுவனங்களும் உதவிகள் செய்து வருகின்றனர். அனைவருக்கும் ராஜா குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.