Skip to main content

தனிமனித இடைவெளியா... அப்படின்னா என்னங்க? அமைச்சர், அதிகாரிகள் அலட்சியம்..! 

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

Minister A V Velu.. social distancing in question

 

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ. வேலு பொறுப்பேற்றுக்கொண்ட பின் அதிகாரப்பூர்வமாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ஜூன் 9ஆம் தேதி வருகைபுரிந்தார். ஜூன் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுசெய்யவுள்ளதாக அறிவித்தார். அதோடு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார். அதில், “நான் அரசுப் பணிகள் குறித்து இரண்டு தினங்கள் ஆய்வுசெய்யவுள்ளதால் கட்சியினர் யாரும் அங்கு வந்து என்னை சந்திக்கக்கூடாது. தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுத்திட ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதனை நாமே மீறக்கூடாது என வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.

 

ஜூன் 10ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகத்துக்கு வருகை தந்த அமைச்சர் எ.வ. வேலுவுடன், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, எம்.பிக்கள் அண்ணாதுரை, விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏக்கள் கிரி, அம்பேத்குமார், ஜோதி, சரவணன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் வருகை தந்தனர். வந்தவர்களைக் கலெக்டர் சந்திப் நந்தூரி வரவேற்றார். காவல்துறையின் வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதனால் பெருந்திட்ட வளாக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பொதுமக்கள் அநாவசியமாக யாரும் வராதவண்ணம் தடுக்கப்பட்டனர்.

 

Minister A V Velu.. social distancing in question

 
பெருந்திட்ட வளாகத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு குடும்ப அடையாள அட்டை இல்லாத 332 மூன்றாம் பாலினத்தவருக்கு 2 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரணமும், சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் 275 மகளிருக்கும் என நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்படி வழங்கும்போது குறைந்தபட்ச தனிமனித இடைவெளியைக்கூட அதிகாரிகள் கடைப்பிடிக்கவில்லை. நலத்திட்ட உதவிப்பெற வந்த பயனாளிகளையும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்லவில்லை. சினிமா தியேட்டரில் புதுப்படத்துக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுவதுபோல் இருந்தனர். இதனைப் பார்த்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அந்தக் கூட்டத்தில் சேராமல் தனியே பாதுகாப்பாக நின்றுக்கொண்டார்.

 

Minister A V Velu.. social distancing in question


தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சில கட்டுப்பாடுகள் தளர்த்தக் காரணம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்களுக்காகத்தான்’ எனச் சொன்னார். இதனைக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அதிகாரிகள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உயரதிகாரிகளே கூட்டமாக நின்றனர். அதோடு பயனாளிகளையும் தனிமனித இடைவெளிவிட்டு நிற்கச் சொல்லாமல் நிறுத்திவைத்திருந்தனர்.

 

கடந்த முதல் அலையின்போது, ஆட்சியில் இருந்த அதிமுகவினரும் இப்படித்தான் நடந்துகொண்டார்கள். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் உள்ளது. அதிகாரிகள் தங்களது விஸ்வாசத்தைக் காட்டுகிறோம் என்கிற பெயரில், கொடூர கரோனா அலையிலும் தங்கள் மீதும், மக்கள் மீதும், சக அரசு ஊழியர்கள் மீதும் அக்கறையில்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்றால், அமைச்சரும் அதனைக் கண்டும் காணாமல் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.