Skip to main content

உலக சாதனை நிகழ்த்தப்போகும் அமைச்சர் உதயநிதி!

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதன்முறையாக உதயநிதி கலந்து கொள்கிறார். இந்த விழா ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் மாவட்ட கட்சி பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவேங்கடநாத பெருமாள், கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 117 ஏக்கர் நிலம் உள்ளது. அதை சரிவர பராமரிக்காததால், அந்த நிலங்கள் முழுவதுமே சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் இத்தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான சக்கரபாணி இத்தொகுதியை பசுமை தொகுதியாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுதி முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறார். அதோடு தொகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் ஊராட்சி மூலம் அகற்ற சொல்லியதுடன் மட்டுமல்லாமல் சீமைக்கருவேலம் இல்லாத ஊராட்சிக்கு ரூ. 10 லட்சம் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அந்தந்த ஊராட்சிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் ஊராட்சிகளில் உள்ள சீமைக்கருவேல முட்களை அகற்றும் பணிகளில் ஊராட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

அப்பொழுதுதான் இடையகோட்டை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் சீமைக்கருவேலம் படர்ந்து இருப்பதை கண்டு, அதை சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நட்டு, ஒரு பசுமை புரட்சியை உருவாக்க வேண்டும் என்று, அமைச்சர் சக்கரபாணி முடிவு செய்து, அதற்கான பணிகளையும் துவக்கி வைத்தார். அதன் அடிப்படையில்தான் கடந்த 2 மாதங்களில் ஒட்டு மொத்த இடங்களையும் ஆயிரக்கணக்கான பேரை வைத்து சுத்தம் செய்து அங்கங்கே  கை மிஷின்கள் மூலம் குழி எடுத்து அதை சீரமைப்பதற்காக தினசரி 3000க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்து இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டது. அது போல் அமைச்சரின் இந்த முயற்சிக்காக தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த கட்சி பொறுப்பாளர்களும் உள்ளாட்சி பொறுப்பாளர்களும் ஒட்டு மொத்தமாக களமிறங்கியும் பணிகளை செய்தனர். இதில் மா, வேம்பு, நாவல், இழுவை, அத்தி, புளி, தேக்கு உள்பட 43 வகையான மரக்கன்றுகள் நட உள்ளனர். இந்த மரக்கன்றுகளும் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இருக்கும் நர்சரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகள் வனத்துறை மூலமாகவும் வாங்கப்பட்டிருக்கிறது.

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

இப்படி வாங்கப்பட்ட 6 லட்சம் மரக்கன்றுகளைத் தான் 6 மணி நேரத்தில் 6 ஆயிரம் பேரை கொண்டு நடவு செய்து உலக கின்னஸ் சாதனை படைக்க போகிறார்கள். ஏற்கனவே 14 மணி நேரத்தில் பல பகுதிகளில் 6 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வெளிநாட்டில் உலக சாதனை படைத் திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இப்படி ஒரே இடத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடுவது முதல் முறையாகும். அதனாலேயே அமைச்சர் சக்கரபாணியின் இந்த செயல் உலக கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது. இந்த விழாவுக்காகத்தான் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி அழைப்பின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  23 ஆம் தேதி முதன்முதலில் கலந்து கொண்டு 6 லட்சத்து ஒன்றாவது மரக்கன்றை நட்டு உலக சாதனை படைக்க வருகிறார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகரில் மிகப் பிரமாண்டமாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த கட்சிக்காரர்கள் 5 ஆயிரம் பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி வழங்க இருக்கிறார். 

 

Minister Udhayanidhi stalin will participate world record planting 6 lakh saplings

 

அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் ஏற்பாட்டில் நகரில் சில பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடப்பட்டிருக்கும் கம்பங்களில் கட்சிக்கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்ற இருக்கிறார். இந்த ஏற்பாடுகளை ஐ.பி.செந்தில்குமார் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். உதயநிதி அமைச்சரான பிறகு முதன்முறையாக திண்டுக்கல்லுக்கு வர இருப்பதால் அவருக்கு மிக பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் இளைஞர் அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.