Skip to main content

அமைச்சர் உதயநிதியின் பிறந்த நாள்; எளியோர்களின் எழுச்சி நாளாகக் கொண்டாட்டம்!

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Minister Udhayanidhi birthday is celebrated as a day of upliftment of the poor!

 

சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட சின்ன செட்டி தெருவில் தமிழக விளையாட்டு  மற்றும் இளைஞர்நலன் மேம்பாட்டுத்துறை  அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.  இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக நகர்மன்ற தலைவர் கே. செந்தில்குமார் கலந்துகொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு அஞ்சல் அட்டையில் கையெழுத்திட்டு  நீட் விலக்கு நம் இலக்கு என வாசகம் அடங்கிய பெட்டியில் நாட்டின் ஜானதிபதிக்கு அனுப்புவதற்கு அளித்தனர். 

 

இந்நிகழ்ச்சியில் திமுக மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், திமுக நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.  அதேபோல் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி அருகே  நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து நீட் விலக்கு குறித்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் கல்பனா சண்முகசுந்தரம், தலைமை தாங்கினார். வார்டு செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல் நகராட்சி அலுவலகம் அருகே நகர் மன்ற உறுப்பினர் சி.கே ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட்விலக்கு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நீட்விலக்கு நம் இலக்கு என கோசங்களை முழங்கினார்கள். இதேபோல் நகரின் அனைத்து வார்டுகளிலும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  

 

இதேபோல்  குமராட்சி கிழக்கு ஒன்றியம் சக்தி நகரில்  குமராட்சி கிழக்கு ஒன்றியம் சார்பில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக திமுக  குமராட்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளர் பெரியசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

 

இதில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சல் அட்டையில் நீட் விலக்கு நம் இலக்கு என எழுதி நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளர் பரந்தாமன், ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணசாமி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குட்டிமணி ஜெகன் ஒன்றிய அமைப்பாளர் ரவிக்குமார்,, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நீட்டுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.  இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பேருந்துகளில் வந்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

 

அண்ணாமலைநகரில் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமையில் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை எளியோர்களின் எழுச்சி நாளாக கொண்டாடினார்கள். இதேபோல் காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, கடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.