Skip to main content

மிதிவண்டி வீராங்கனைக்கு  14 லட்சம் மதிப்பிலான சைக்கிள் வழங்கிய அமைச்சர் உதயநிதி! 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Minister Udayanidhi gave a bicycle worth 14 lakhs to the cycling team!

 

தமிழ்நாடு  அரசின்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  இன்று (22.05.2023) சென்னை தலைமைச் செயலகத்தில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மிதிவண்டி வீராங்கனை (Cycling) செல்வி ஷா. தபித்தாவிற்கு போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவைமைக்கப்பட்ட ரூபாய் 13.99 லட்சம் மதிப்பிலான மிதிவண்டியை வழங்கினார்.

 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வரும் செல்வி ஷா. தபித்தா,  சைக்கிளிங் வீராங்கனை ஆவார். இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் (Track) வெள்ளிப்பதக்கம்  பெற்றுள்ளார்.

 

ஜனவரி 2023-ஆம் வருடம் மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக்கில் 07.01.2023 முதல் 10.01.2023 வரை நடைபெற்ற 27-வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். 

 

தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று, தற்பொழுது National Centre of Excellence (NCOE) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி மேற்கொண்டுவரும், செல்வி. ஷா  தபித்தா,  பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறுவதற்குரிய பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஏதுவாக போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவைமைக்கப்பட்ட மிதிவண்டி வழங்கினால் பல்வேறு சாதனைகளை படைத்து நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என்று  அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைத்திருந்தார். 

 

அவரது கோரிக்கையினை பரிசீலித்த  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மிதிவண்டி வழங்கும் நடவடிக்கையை  மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட மிதிவண்டியை,  சைக்கிளிங்  வீராங்கனை செல்வி ஷா தபித்தா கேட்டுக்கொண்டபடி தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில்  ரூபாய் 13.99 லட்சம் மதிப்பீட்டிலான மிதிவண்டியை வாங்கினர்.

 

அந்த மிதிவண்டியை ஷா தபித்தாவுக்கு இன்று தலைமைச் செயலகத்தில்  வழங்கினார் அமைச்சர் உதயநிதி.  இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

தனது கோரிக்கையினை ஏற்று மிதிவண்டி வழங்கிய அமைச்சர் உதயநிதிக்கும் அதிகாரிகளுக்கும் நன்று சொன்னதோடு, "சர்வதேச அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றிப்பெற்று நம் தமிழ்நாட்டிற்கு பெருமைத் தேடி தருவேன்" என்றார் வீராங்கணை செல்வி ஷா தாபித்தா.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள்; எம்எல்ஏ தலைமையில் ரத்த தானம்!

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Blood donation lead by MLA or Minister Udhayanidhi  birthday in Cuddalore

 

கடலூரில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். 

 

முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல். குணசேகரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் இளைஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், கர்ணன், சரத் தினகரன், மகேஸ்வரி, விஜயகுமார், பாருக் அலி, கீர்த்தனா, ஆறுமுகம், ராதிகா, பிரேம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவர் பிரவீன் ஐயப்பன் செய்திருந்தார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

''எனக்கு விருப்பம் இல்லை'' - மறுத்த அமைச்சர் உதயநிதி

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

 "I have no choice" - Minister Udayanidhi refused

 

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 46 வது பிறந்தநாள் திமுகவினர் மத்தியில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ‘குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள்’ என்ற புத்தகத்தை முதல்வருக்கு வழங்கினார்.

 

தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சி.வி.சண்முகம், தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

 

இந்நிலையில் காரில் ஏறிய உதயநிதியை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 'முதலில் நடிகர், பின்னர் எம்.எல்.ஏ இப்போது அமைச்சராக இருக்கீங்க இந்த பிறந்தநாளை எப்படி பாக்குறீங்க?' என்ற கேள்விக்கு, ''எல்லா பிறந்தநாளை போன்றுதான் இந்த பிறந்தநாளும். இந்த பிறந்த நாளில் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு. காலையில் இருந்து தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலையை முதல்வர் திறந்து வைத்துள்ளார்'' என்றார்.

 

'உங்கள் பிறந்த நாளில் தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ''டிசம்பர் 17 சேலத்தில் நடக்கும் மாநாட்டை வெற்றியடைய செய்ய வேண்டும். அந்த பொறுப்பை முதல்வர் இளைஞரணிக்கு கொடுத்துள்ளார்'' என்றார்.

 

'சார் உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என தொண்டர்கள் சிலர் சொல்கிறார்களே' என்ற கேள்விக்கு, 'எந்த தொண்டர் சொன்னாங்க' என்றார். போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்காங்க, என செய்தியாளர் சொல்ல ''எங்க ஒட்டியிருக்காங்க'' என உதயநிதி கேட்க, அண்ணா அறிவாலயம் முன்பே ஒட்டியிருக்காங்க என செய்தியாளர் சொன்னார். அதற்கு ''நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன். எனக்கு விருப்பம் இல்லை'' என்றார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்