Skip to main content

நகராட்சி அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்த அமைச்சர்...அதிகாரிகள் அதிர்ச்சி!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி அலுவலகத்துக்கு செப்டம்பர் 5- ஆம் தேதி மதியம் திடீரென வருகை தந்தார் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், அதிமுக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி. 
 

நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் என்னென்ன பணிகள் நடைபெறுகிறது எனக்கேட்டார். அவரிடம் பாதாள சாக்கடை திட்டப்பணி, சாலைகள் சீரமைப்பு பணி, ரெட்டிதோப்பு ரயில்வே மேம்பால பணி உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளதாக கூறினர்.
 

ஆம்பூர் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கான வேலைகளை செய்யுங்கள என்றவர், மழைக்காலம் தொடங்கிவிட்டது குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமையுங்கள் என்றார்.

Minister in a sudden inspection at the municipal office shocked by officials!

ரெட்டி தோப்பு ரயில்வே மேம்பால பணி ரூபாய் 30 கோடி மதிப்பில் நடைபெற உள்ளது. அந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர், தற்காலிக தீர்வாக மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் நீரை சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
 

அலுவலகத்தில் முக்கிய அதிகாரிகள் யாருமில்லாத நிலையில் திடீரென அமைச்சர் ஆய்வு பணியை மேற்கொண்டது எதனால் என விசாரித்தபோது, ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் திமுகவை சேர்ந்த விஸ்வநாதன் மக்கள் பிரச்சனைகள் சிலவற்றில் கவனம் செலுத்துகிறார், இதனால் மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கிறது. அதோடு, நடந்து முடிந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் ஆம்பூர் நகர வாக்குகளும் அதிமுகவுக்கு குறைவாகவே கிடைத்துள்ளது.

Minister in a sudden inspection at the municipal office shocked by officials!


இதனை கருத்தில் கொண்டும், திமுக எம்.எல்.ஏவுக்கு எந்த நிலையிலும் நல்ல பெயர் பெற்றுவிடக்கூடாது என்பதாலே அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார் என்கிறார்கள் திமுக தரப்பை சேர்ந்தவர்கள். அலுவலகத்தில் குறைந்த அளவு அதிகாரிகளே இருந்த நிலையில் திடீரென அமைச்சர் அலுவலகத்தில் அமர்ந்துக்கொண்டு தகவல்களை கேட்டது, ஆய்வு செய்தது என்பது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.