Skip to main content

சசிகலா விஷயத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் நிலை?    

Published on 01/07/2020 | Edited on 01/07/2020
sengkottiayan

 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது துறையில் எந்த முடிவையும் தீர்க்கமாக எடுக்க முடியாமல் இந்த கரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.


இன்று 1.7.20 புதன்கிழமை ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில்  புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலைகளையும், குடிநீர் தொட்டிகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகள் வரபாளையத்தில் 30 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வேகமாக செயல்பட்டு வருகிறது என்றார்.  ஆன்லைன் வகுப்புகள் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு,

இவை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேர்வு வைத்த பிறகே முடிவு வெளியிடப்படும். மீண்டும் பேருந்துகள் இயங்கினால் மட்டுமே மாணவர்களான அவர்களுக்கு தேர்வு வைக்க முடியும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூபாய் 248 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பாட புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்று ஆலோசித்து முடிவடுக்கப்படும். பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில்தான் வெளியிடப்பட்டு வருகிறது. நிலைமைகள் சரியான பிறகே பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்படும். ஆனால் இப்போதுள்ள சூழல் படி பார்த்தால் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், வருவாய்துறை, மருத்துவத்துறை என அனைவரது ஆலோசனைகள் கேட்கப்பட்டு பின்னர்தான் பள்ளிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும். 8 ஆம் வகுப்பில் திறனாய்வு தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு 248 கோடி ரூபாய் நிதிகள் வழங்கப்பட்டுள்ளது. என்று கூறிய அவரிடம் சசிகலா விடுதலையாகப் போகிறார் என்ற செய்தி என ஒரு செய்தியாளர் கேட்க தொடங்கும் போதே எல்லோரும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம்... என கூறி விட்டு வணக்கம் போட்டுவிட்டு வேகமாக கிளம்பி விட்டார். அங்கிருந்த ஒரு மூத்த ர.ர. "அமைச்சர் சொன்ன சமூக இடைவெளி என்பது சசிகலா விஷயத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி எடுக்கிற முடிவுபடிதான் செங்கோட்டையன் நடவடிக்கை இருக்கும் என்பது. அதுதான் வாய் பேசாமல் இடைவெளியுடன் இருக்கிறாராம்..." என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.