minister sengottaiyan pressmeet in erode

ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி செயல்படுகிறார் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார். முதல்வர் பழனிசாமியின் ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கரோனா தடுப்புப்பணி சிறப்பாக உள்ளது என பிரதமரே பாராட்டும் வகையில் முதல்வரின்செயல்பாடு உள்ளது. அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது நாகரிகம் அல்ல என்பதுதான் எனது கருத்து. தமிழக நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.

Advertisment