"பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன" -அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

minister sengottaiyan press meet at erode district

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "குழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் 90% கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டுள்ளன.

எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தைஉருவாக்குவோம். கரோனா வைரஸ் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். கரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Erode minister sengottaiyan pressmeet
இதையும் படியுங்கள்
Subscribe