Advertisment

தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு உண்டு... -12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

செங்கோட்டையன்

Advertisment

மாணவர்கள், பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்புபொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 24 வரை நடைபெற்றது. ஆனால் கரோனா தொற்று அச்சத்தால் இறுதியாக நடைபெற்ற தேர்வினைசுமார் 35 ஆயிரம் மாணவர்கள்எழுதவில்லை.

இந்நிலையில், தேர்வெழுதாதவர்களில் 718 பேர் மட்டுமே தேர்வு எழுதவிருப்பம் தெரிவித்திருந்தாலும், அவர்களுக்குதேர்வு வைத்த பின்னரே முடிவை அறிவிக்கப்படும் எனஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஆனால் பனிரெண்டாம்வகுப்புபொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை எதிர்பாராத நிலையில் வெளியாகின. இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,

Advertisment

“பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள்எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான்தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், பெற்றோர், மாணவர்கள் எல்லோரின் வேண்டுகோளையும் ஏற்று,இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.

தேர்வை எழுதாத மாணவர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. முதல்வரின் ஆணைப்படி, அவர்கள் பொதுத்தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதி தேர்வு எழுதாதவர்களுக்கு 27-ம் தேதி மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அவர்களின் தேர்வு முடிவுகளும் விரைந்து வெளியிடப்படும்.” இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

12th result minister sengottaiyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe