Skip to main content

“தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Minister sengotayan interview


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 22ஆம் தேதி வியாழக்கிழமை தனது தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் தொடக்க விழாக்களில் கலந்து கொண்டார்.

 

பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 426 மையங்களில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 303 மாணவர்கள் நிச்சயம் மருத்துவ படிப்பு படிக்க முடியும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.


குடி மராமத்து பணிகளால் இப்போது தமிழகம் முழுக்க ஏரி, குளங்கள் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. விவசாயத்திற்கோ குடிநீருக்கோ நமது முதல்வர் ஆட்சியில் பஞ்சமே இல்லை. நமது முதல்வர் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மிகவும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.” என்று கூறினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்" - செங்கோட்டையன்

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

erode east by election former minister sengottaiyan talks about admk symbol 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையடுத்து இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

 

ஈரோடு மணல்மேட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டுள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

 

நாளை மறுதினம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது. அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம்" என்றார். 

 

 

Next Story

முதல்வர் முறைப்படி அறிவிப்பார்..! - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

dddd

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயலூர் ஊராட்சியில், வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைத் துவக்கிவைத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 35 பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடன்களை வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து, நம்பியூர் பகுதிகளில் சுமார் 340 -க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடன், கன்று வளர்ப்பு கடன், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா வழங்குதல் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "மருத்துவப் படிப்பிற்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

தமிழக அரசு ஆந்திராவையோ, கேரளாவையோ கவனிக்க வேண்டியது இல்லை. மாணவர்களையும், பெற்றோர்களையும் கவனிக்கிற அரசு என்ற முறையில் பள்ளிகள் திறப்பு குறித்து, வருகிற நவம்பர் 9 -ஆம் தேதி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பித்து பின்னர் முடிவு செய்யப்படும். 

 

மாணவர்களின் நலன் கருதியே பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கருத்துகள் வந்ததன் அடிப்படையில் தான், முழுமையான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முறைப்படி அறிவிப்பார்.

 

'கருத்துக் கேட்பு, கண்துடைப்பு' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, எதற்கெடுத்தாலும் கண்துடைப்பு என்றால் என்ன செய்வது? பெற்றோர்களின் ஆலோசனையைக் கேட்ட பிறகுதான் முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாகவும் கொடுக்கலாம். 

 

cnc

 

நீட் தேர்வுப் பயிற்சி 14ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. இதில், 15,492 பேர் பயிற்சிபெற உள்ளனர். இன்னும் சேரவிருக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தாண்டு பொதுத்தேர்வு ரத்தாகுமா என்ற கேள்விக்கு, அது யோசிக்கவேண்டிய ஒன்று. துறை என்ன சொல்கிறது என்று தெரிந்துதான் எதையும் தெரிவிக்கமுடியும். அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வு செய்வார் என்றார்.