Skip to main content

பூங்கொத்துகளுக்கு பதில் புத்தகம், மரக்கன்றுகள்...யோசனை சொன்ன அமைச்சர்!!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

"இனி வரும் காலங்களில் அரசு விழாக்களின்போது விழாவில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பதும், பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதை தவிரத்துவிட்டு அதற்கு பதிலாக புத்தகங்களையும், மரக்கன்றுகளையும் வழங்கும் நடைமுறையை பின்பற்றும்படி காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வி துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆலோசனை வழங்கி நடைமுறையும் படுத்தவும் செய்துள்ளார்.
 

minister recommends to give tree samplings and books


அமைச்சரின் அந்த யோசனையை சிந்தித்து ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த்ராஜா, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அந்த சுற்றறிக்கையில் என்னதான் கூறப்பட்டிருக்கிறது என்பதை ஆவளோடு படித்துப்பார்க்கும் அதிகாரிகளும் நெகிழ்ந்து புகழ்ந்துவருகின்றனர், அந்த அறிக்கையில்," காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் அரசு  விழாக்களின்போது பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் கெளரவிக்கப்படுகிறது. சால்வை மற்றும் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்களையும், மரக்கன்றுகளையும் வழங்கும்படி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் அவர்கள் பரிந்துரைத்துள்ளார். பூங்கொத்தின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. ஒருவருக்கு அதை வழங்கும்போது  அந்தநேரம் மட்டுமே அதுபயன்படும். அடுத்த நொடியே வீனாகிவிடும், குப்பைக்கு போய்விடும், ஆனால் ஒரு புத்தகத்தையோ, மரக்கன்றுகளையோ வழங்கும்போது அது வீடுகளின் ஒரு பகுதியாகவும், குடும்பத்தின் ஒரு பகுதியாகவும் மாறும். இதனால் செலவும் குறைக்கப்படுகிறது, மனநிறைவும் பெறுகிறது எனவே, அரசாங்க விழாக்களின்போதும், சிறப்பு சந்தர்ப்பங்களில் தலைவர்களை வாழ்த்தும்போதும் புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகளை பரிசளிக்கும் நடைமுறையை அரசுத்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் வளர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்". என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இது குறித்து அமைச்சர் ஆர்.கமலக்கண்ணண்," அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதும், சால்வை அணிவிப்பதும் சம்பிரதாயமாக நடைபெற்று வருகிறது. இதனால் எந்த பலனும் கிடையாது. மாறாக புத்தகங்களை வழங்கினால் அது வாழ்க்கைக்கு எப்பொழுதும் பயனளிக்கும். அதுபோன்று மரக்கன்றுகளை வழங்கினால் அது சுற்றுச்சூழலை பராமரிக்க உதவியாக இருக்கும். எனவேதான் அரசு விழாக்களின்போது இதனை பின்பற்ற நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினேன். இந்த நடைமுறையை பின்பற்றும்படி  மாவட்ட ஆட்சியரும் அனைத்து துறைகளுக்கும் வலியுறுத்தியிருக்கிறார்." என்றார்.

சுற்றறிக்கை அனுப்பபட்ட அடுத்த நாளை திருபட்டினத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டனர். இதனை இனிவரும் காலத்தில் இது தொடர்ந்து பின்பற்றப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

தடையை மீறி கடலில் குளித்த மாணவி உயிரிழப்பு; தேடச் சென்ற மாணவர்கள் மாயம் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
A student who broke the ban and bathed in the sea lose their live; The students who went to look for magic

காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.

இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.