மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "முதல்வர் செயல் நாயகன் என்பதால் செயல்படுகிறார்; அறிக்கை நாயகன் என்பதால் ஸ்டாலின் அறிக்கை கேட்கிறார். ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை, கருப்பு அறிக்கையைக் கேட்கிறார். தேசிய கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் மாநில கட்சிகள் தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும். தி.மு.க.வில் வெகு விரைவில் பூகம்பம் வெடிக்கும்" என்றார்.