Skip to main content

அதிமுக ஓட்டையை அடைக்கும் பெரிய கொத்தனார்!  -மண்டை உடைப்பில் மந்திரி பெருமிதம்!!!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
rajendrabalaji

 

 

திமுக – காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி, விருதுநகர் தேசபந்து மைதானத்தில், விருதுநகர் மாவட்ட அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.  
 

“நாங்க எப்படி சும்மா இருப்போம்! நாங்க ஏற்கனவே விசிலடிச்சு வந்த ஆளுக. அடுத்தவன் உட்கார்ந்திருக்கான்னா.. மேடையில இருந்துக்கிட்டு கரெக்டா கல்லுட்ட அடிக்கிற ஆளுக. கவுந்தடிச்சிட்டு மண்டைய உடைக்கிற ஆளுக. இப்படிப்பட்ட ஆளுகதான் நாங்க அதிமுகவுல பெருவாரியா இருக்கோம். எங்ககிட்டேயாவா?” என, அதிமுகவினரின் புஜபலபராக்கிரமத்தை ரொம்பவே எடுத்துவிட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி “நம்ம கட்சியில பேஸ்மட்டம் வெயிட்டா இருக்கு. பில்டிங்ல கொஞ்சம் கிராஸ் அடிக்கும். அதை சரி பண்ணிக்கலாம். ஆனா.. அங்கே பில்டிங் நல்லாயிருக்கு. பேஸ்மட்டம் வீக்கா இருக்கு. கீழ ஆடுது. அப்புறம் எப்படி திமுக நிற்கும்? ஸ்டாலினை யாரும் விரும்பலியே! திமுகவை யாரும் விரும்பலியே! எம்.ஜி.ஆர். வாங்கிக்கொடுத்த ஹெர்குலிஸ் சைக்கிளில் போய்த்தான் முரசொலி மாறன் படிச்சாரு.   உள்ளுக்குள்ளேயே தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் ஸ்டாலினுக்கு வேட்டு வச்சிக்கிட்டு இருக்காங்க. அழகிரி பேசுறதுதான் வெளிய தெரியும். அவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுறாங்கங்கிறது எங்களுக்குத்தான் தெரியும். நமக்கு பேஸ்மட்டம் வெயிட்டா இருக்கிறதுனால, பில்டிங்ல கிராஸ் இருந்தாக்கூட லைட்டா பூசிருவோம். அதுக்குப் பெரிய கொத்தனாரெல்லாம் இருக்காங்க நம்மகிட்ட. அவங்கள வச்சி சரியா பூசி, எங்கெங்கே ஓட்டை இருக்கோ, அங்கேயெல்லாம் அடைச்சு, திருப்பரங்குன்றத்துலயும், திருவாரூர்லயும் அடிச்சு வந்திருவோம். 


தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அண்ணா சமாதி, கலைஞர் சமாதி தெரியவில்லை. பொம்மை போல இருக்கிறார். அம்மா வாக்கு தெய்வ வாக்கு. அவங்க சொன்னபடி, தேமுதிக இன்னிக்கு அழிஞ்சு போச்சு. ஈழத்தமிழர் பிரச்சனையை எங்களைவிட அதிகம் தெரிந்தவர் வைகோ. நீங்க போய் அங்கே சேர்ந்திருக்கீங்க. ஒண்ணு வெளியே வந்திருங்க. இல்லைன்னா.. அங்கேயே இருந்து அவங்கள முடிச்சிட்டு வாங்க.  கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியது கருணாஸ்தான். குடித்துவிட்டு ஆடியதும் கருணாஸ்தான். எடப்பாடியை மறிக்க முடியுமா? இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பின்னால் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சரிடம் கோயம்பேடு மார்க்கெட் கேட்டார் கருணாஸ். ஏலத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் முதல்வர். உடனே கோபத்தில் வெளியேறிவிட்டார். 
 

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு, நாங்க கொஞ்சம் சுணக்கம் காட்டியதுதான் காரணம். திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலில் விட மாட்டோம். அதிமுக வேட்டி கட்டியிருக்கிறவன் எல்லாரும் அதிமுககாரன் இல்ல. இரட்டை இலை சின்னம் வைத்திருப்பவன்தான் அதிமுககாரான். அம்மா காட்டியது இரட்டை இலை சின்னத்தைத்தான். வேறு எந்த சின்னத்தையும் காட்டவில்லை. டீசல், பெட்ரோல் விலை உயர்ந்தாலும், தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி அண்ணன். கன்னியாகுமரியில் அதிமுக பலம் பெற்றிருக்கிறது. திமுகவுக்கு நான் சவால் விடுகிறேன். இனி எந்தத் தேர்தலிலும் முந்த முடியாது.” என்றார் அதிரடியாக. 
 

1989-ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது அமைச்சருக்குத் தெரியாது போலும். அதிமுக விரிசலை சரிபண்ணக்கூடிய வல்லமை பெற்ற பெரிய கொத்தனார் யார் என்பதை கடைசிவரை கே.டி.ராஜேந்திரபாலாஜி சொல்லவே இல்லை. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.