எங்களுக்கு சாதகமாக செயல்படுவதற்கு தேர்தல் ஆணையம் என்ன அதிமுகவின் கிளைக் கழகமா என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில்,

Advertisment

minister rajendrabalaji press meet

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஆட்சியை கலைத்துவிடலாம்என தினகரனும் ஸ்டாலினும் போடும் கணக்கு பொய் கணக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போடும் கணக்கு தெய்வக்கணக்கு என்ற அவர். தோல்வி அடையப் போவதை தெரிந்தும் தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் பழிபோடுவதாக ராஜேந்திரபாலாஜி விமர்சித்தார்.

தினகரன் போடுகின்ற கணக்கு பொய்க்கணக்கு, ஸ்டாலின் போடுகின்ற கணக்கு மனக்கணக்கு, எதுவுமே நடக்காத கணக்கு ஆனால்எடப்பாடியார்போடுகின்ற கணக்கு தெய்வக்கணக்கு .தினகரன்சேர்ந்தாலும் சரி, ஸ்டாலினும் சேர்ந்தாலும் சரி இன்னும் அவர்களோடு இருக்கின்ற எல்லோரும் சேர்ந்தாலும் சரி இந்த ஆட்சியை அகற்ற எண்ணுகின்ற எந்த கூட்டணியும், எந்த பேச்சுவார்த்தையும் அத்தனையும் தோல்வியில்தான் முடியும் எனக் கூறினார்.