Skip to main content

தொகுதி மக்களைக் குஷிப்படுத்த அமைச்சர் நடத்திய சேவல் சண்டை!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

minister rajendra balaji virudhunagar district sivakasi

 

‘சேவல் சண்டை வன்முறைக்கு அல்லவா வழிவகுக்கும்? அதை ஒரு விழாவாகவே நடத்தி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசு வழங்கியது சரிதானா?’ என்று கேள்வி எழுப்பியதோடு, 2014-ல் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிகாட்டிய விலங்கு நல ஆர்வலரான கண்ணன் “சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் ஒன்றுக்கொன்று எதிரி அல்ல. மனிதர்களின் ஏற்பாட்டில்தான் இரண்டு சேவல்களும் சண்டையிட்டுக்கொள்கின்றன. வீரியத்துடன் சண்டையிட வேண்டும் என்பதற்காகவும், எதிரி சேவலுக்கு காயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவும்,  சேவல்களுக்கு மதுபானம் கொடுக்கின்றனர். ஒரு சேவல் இன்னொரு சேவலைத் தாக்குவதைப் பார்த்து ரசித்து மகிழ்கின்றனர்.

minister rajendra balaji virudhunagar district sivakasi

 

ஒரு சேவல் இன்னொரு சேவலைத் தாக்கிக் காயப்படுத்தி, ரத்தம் சிந்த வைத்து, காயம் பட்ட சேவல் கடைசியில் உயிரிழப்பதை,  தாக்கிய சேவலின் வெற்றியாகவும், அதன் உரிமையாளரின் வெற்றியாகவும் கொண்டாடுகின்றனர். மனிதத் தன்மை உள்ள யாரும் இத்தகைய குரூர மகிழ்ச்சியை விரும்பமாட்டார்கள். இதுபோன்ற சண்டைகளைக் காணும் சிறுவர்களும் மற்றவர்களும் மனரீதியாக தவறாக வழிநடத்தப்பட்டு, வன்முறைப்  பாதைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

minister rajendra balaji virudhunagar district sivakasi

 

மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை உள்ளது. கடந்த 1960-ம் ஆண்டின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தின் 11(ஏ) பிரிவானது, எந்த மிருகத்துக்கும் எவ்வித வதையும் ஏற்படுத்துவதை தடை செய்கிறது. ஆகவே, எல்லா உயிரினங்களையும் கருணையுடன் நடத்த வேண்டிய அடிப்படை கடமை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. தேவையின்றி எந்த உயிரினத்தையும் வதை செய்யவோ, காயம் ஏற்படுத்தவோ மனிதர்களில் யாருக்கும் உரிமை இல்லை.” என பெருமூச்சு விட்டவாறே வாசித்து முடித்தார். 

minister rajendra balaji virudhunagar district sivakasi

 

விழாவை நடத்திய விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தரப்பில், “ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே, தொன்றுதொட்டு பொழுதுபோக்கிற்காகவும், பாரம்பரிய சேவல் இனங்களைப் பாதுகாக்கும் பொருட்டும், வீர விளையாட்டாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. அதனால், சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிய வழக்கில், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று 2019-ல் அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம். சேவல் சண்டையில் இரண்டு வகை உண்டு. சிவகாசி தொகுதியில் நடந்தது கத்திக்கால் சண்டை கிடையாது. வெற்றுக்கால் சண்டைதான். அதனால்தான் நடத்த முடிந்திருக்கிறது.” என்றனர். 

minister rajendra balaji virudhunagar district sivakasi

 

சிவகாசியில் நடந்த வெற்றுக்கால் சேவல் களப் போட்டியில், 100 களங்கள் அமைக்கப்பட்டு, 1500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. ஒவ்வொரு போட்டியும் ஒருமணி நேரம் நடந்தது. இதில், தலா 15 நிமிடங்கள் போட்டி என்றும், இடைவேளை என்றும் மாறி மாறி விடப்பட்டது. வட்டத்துக்கு வெளியே சேவல் சென்றாலோ, தலை துவண்டாலோ, ஓடினாலோ தோற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டி சேவல்கள் இரண்டும் இறகுகளை விரித்து, பறந்து சண்டையிட்டபோது, ஆர்ப்பரித்தது கூட்டம். 

 

வெற்றி பெற்ற 800 சேவல்களுக்கும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசுகள் வழங்கினார். தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில், தனது தொகுதி மக்களைக் குஷிப்படுத்த, இந்தச் சேவல் சண்டை அமைச்சருக்குக் கை கொடுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

வைரலான சி.சி.டி.வி.! ஓட்டல் ஓனரைக் கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Sivakasi viral cctv police arrested two

‘பார்சல் வழங்குவதற்குத் தாமதமானதால் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து’ என சிவகாசி – மாரனேரியில் நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மாரனேரி காவல்நிலையம், ஏ.துலுக்கபட்டியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன்கள் மாரீஸ்வரன் மற்றும் பாண்டீஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்தது.

ஜெகநாதன் என்பவர் ஆலங்குளம் சாலையில் ஜே.ஜே. ஓட்டல் நடத்துகிறார். அவருடைய ஓட்டல் தொழிலுக்கு உதவியாக மகன்கள் கரிமால், ராஜேஸ் கண்ணன், வாசுதேவன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இரவு 8 மணியளவில், மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் அந்த ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கச் சென்றனர். அப்போது ராஜேஸ் கண்ணன் ஓட்டலுக்குள் செல்லும்போது தெரியாமல் இடித்துவிடுகிறார். உடனே இருவரும்  “பார்த்துப் போகவேண்டியதுதானே..” என்று ராஜேஸ் கண்ணனைக் கெட்ட வார்த்தையால் திட்டுகின்றனர். கரிமாலும் ஓட்டலில் இருந்தவர்களும் இருவரையும் சத்தம்போட,  “உங்களை வந்து வச்சிக்கிறோம்.” என்று சென்றுவிட்டனர்.

அடுத்த 15 நிமிடங்களில் மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் மீண்டும் ஓட்டலுக்கு வந்து வாசுதேவனைக் கத்தியால் குத்தினார்கள். அப்போது கரிமாலும் வாசுதேவனும் பிடிக்க முயன்றபோது, வாசுதேவனுக்கு கையில் காயமேற்பட்டது. கரிமாலும் ஓட்டலில் இருந்த மற்றவர்களும் கத்தி வைத்திருந்த சகோதரர்களுடன் மல்லுக்கட்டியபோது “எங்கள பகைச்சுக்கிட்டா கத்தியால குத்தி கொன்றுவிடுவோம்..” என்று மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் கரிமால் அளித்த புகாரின் பேரில், மாரனேரி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து இருவரையும் தேடிவந்தது. தற்போது மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் கைதாகியுள்ளனர்.