வடக்கிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுக்கப் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மழையால் பாதிப்படைந்த சென்னை மந்தைவெளியில் உள்ள மாநகரப் போக்குவரத்து பணிமனையைப் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.