Skip to main content

மனு கொடுக்க வந்த நரிக்குறவருக்கு சால்வை அணிவித்து கோரிக்கையை கேட்ட அமைச்சர்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

The minister put a shawl on the  who came to give the petition and heard the request

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் மேல்நிலைப் பள்ளி, மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

 

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசும் போது, ''கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 23 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறினார்கள். அனைவரையும் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டிலேயே மிகச் சிறந்த அரசுப் பள்ளிகளில் ஒன்று கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளி என்று கூறலாம். அனைவரும் மருத்துவராக வேண்டும் என்பதில்லை ஆனால் கல்வியால் மட்டுமே நல்ல மனிதர்களாக முடியும். மேலும் நல்லா படிக்கிற மாணவ, மாணவிகளை மட்டுமே தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த பாகுபாடு மாறி அனைவரையும் சமமாக கவனித்துக் கற்பிக்க வேண்டும்.

 

இந்த இலவச சைக்கிள் கொடுப்பது நீங்கள் பள்ளிக்கு வருவதற்காக மட்டுமல்ல உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் கவனத்தில் கொண்டே வழங்கப்படுகிறது. எரிபொருள் மூலம் இயங்கும் கார், பைக் போன்ற அனைத்து வாகனங்களாலும் புகை வெளியேறி சுற்றுச்சூழல் மாசுபடும் ஆனால் சைக்கிள்களால் எந்த பாதிப்பும் வராது. உடல் ஆரோக்கியம் பெறும்.

 

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர் பதவிகளில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. இதற்கு காரணம் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரும்தான். அந்த வழியில் வந்த நமது முதலமைச்சரின் நடவடிக்கைகளுமே. தற்போது பள்ளிக் கல்விக்காக மட்டும் ரூ.36 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். அதேபோல நமது பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்றுள்ளார். ஒரு நாளைக்கு ஆயிரத்து 200 கி.மீ பயணம் செய்து பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார் என்றார்.

 

கீரமங்கலம் அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில் பள்ளி செல்லா குழந்தைகளை கல்வி அதிகாரிகள் இன்று பள்ளிக்கு அழைத்து வந்து சேர்த்துள்ளனர். அந்த அதிகாரிகளை பாராட்டுகிறேன். மேலும் அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி மக்கள் தங்களுக்கான சாதிச்சான்றிதழ் எஸ்.டி என தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனு உடனடியாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

The minister put a shawl on the  who came to give the petition and heard the request

 

மேலும் கோரிக்கை மனு கொடுக்க வந்த நரிக்குறவர் காலனியை சேர்ந்தவருக்கு சால்வை அணிவித்து அவரது கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், ஏபிஓ தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.