Skip to main content

புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு!

Published on 15/04/2022 | Edited on 15/04/2022

 

Minister of Public Works who personally inspected the quality of the road!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீராணம் ஏரி கரையில் உள்ள பூதங்குடி கிராமத்திலிருந்து வாழைக்கொல்லை கிராமம் வரை 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 3 கோடி செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையின் தரத்தைத் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு  மற்றும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (15/04/2022) நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வாழைக்கொல்லை கிராமத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள பின்னர் சாலையின் தரம் குறித்து, இயந்திரத்தால் துளையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து, ராதாமதகு வாய்க்கால் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ வேலு, "கடலூர் மாவட்டத்திற்கு சாலை விரிவாக்கப் பணிக்காக ரூபாய் 195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தமிழக வேளாண்துறை அமைச்சர் முயற்சி தான். பெண்ணாடம்- திட்டக்குடிக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Minister of Public Works who personally inspected the quality of the road!

கடலூரிலிருந்து மடப்பட்டு வரை சுமார் 37 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகள் விரிவுபடுத்தும்போது சாலையின் ஓரத்தில் உள்ள பசுமை மரங்கள் வெட்டப்படுகிறது. அதனால் 10 ஆயிரம் புதிய மரங்கள் நடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் மரங்கள் வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகிற மாவட்டம். இதில் 22 இடத்தில் கல்வெட்டுப் பாலம் அமைக்கப்பட்டால், வெள்ளபாதிப்பு இருக்காது. அதனைக் கணக்கில் எடுத்துக் கல்வெட்டுகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

 

வீராணம் ஏரிகரை சாலை தற்போது 7 மீட்டர் சாலையாக உள்ளது. இதனை அகலப்படுத்த வேண்டும் என்று வேளாண்துறை அமைச்சர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பிளர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் வலியுறுத்தி வருகிறார்கள். இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வீராணம் ஏரியின் கீழகரைப் பகுதியான கந்தகுமரனிலிருந்து மேலகரை பகுதி சோழதரம் வரை ஏரியின் உள்ளே பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிக தொகை வேண்டும் என்பதால், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, இதற்கான ஒன்றிய நிதியை பெற்று பாலம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்" எனத் தெரிவித்தார். 

 

இந்த நிகழ்வின் போது, காட்டுமன்னார்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

லாரியுடன் சிக்கிய 1,425 கிலோ தங்கம்; பறக்கும் படை அதிரடி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
1,425 kg of gold caught with the truck; The Flying Squad is in action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த சிறிய ரக லாரி ஒன்றை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1,425 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, தங்க சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.