Skip to main content

"மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது" - அமைச்சர் கே.என்.நேரு 

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

minister nehru talks about self help group loan limit increased 

 

மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்றிருந்த கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் புதிய கடனுதவி வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கியதோடு மீண்டும் கடனுதவி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.

 

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு பேசியது, "மகளிர் சுய உதவிக் குழுவினர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெற்ற 31.3.2021ம் தேதி வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 2,756 கோடி ரூபாய் மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 5241 மகளிர் சுய குழுக்களைச் சேர்ந்த 51,023 பெண்கள் கூட்டுறவு அமைப்புகளில் பெற்றிருந்த 134.40 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீண்டும் புதிதாக மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டமும் இன்று முதல் தொடங்கி வைக்கப்படுகிறது.

 

கூட்டுறவு சங்கங்களில் சுய உதவிக்குழுக்கள் உறுப்பினராக சேர்வதற்கு குறைந்தபட்சம் 12 நபர்கள், அதிகபட்சம் 20 நபர்கள் இருக்க வேண்டும். தற்போது, மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குழுவின் சேமிப்பு தொகைக்கு ஆறு மடங்காக கடனுதவி வழங்கப்படுகிறது. 36 மாதங்களில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரம் மேம்படுகிறது. அவசர கடன் தேவைகளை சுயமாக பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. கந்துவட்டிக்கு கடன் வாங்குவது தவிர்க்கப்படுகிறது. குடும்ப பொருளாதாரம் உயர்வதோடு பெண்களின் பெயரில் சொத்துக்களை உருவாக்க முடிகிறது" என்று பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் மற்றும் அருள், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மீரா பாய், சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.