Skip to main content

"வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்கும்போது கூடுதல் லாபம் கிடைக்கும்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

minister mrk panneerselvam talks about value added product related

 

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திங்கட்கிழமை சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் நடைபெற்று வரும் அண்ணா குளம் தூர்வாரி சீரமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அதன் பின்னர் ஞானப்பிரகாசர் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் உழவர் சந்தையில் காய்கறி மார்க்கெட் கட்டும் பணியை ஆய்வு செய்தார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிதம்பரம் நகராட்சியில் 33 திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறன. 5 கோடியே  60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 குளங்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறன. அதேபோல் ரூ.5 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. ரூ.140 கோடிக்கு சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. ரூ.250 கோடி மதிப்பீட்டில் சிதம்பரம், அண்ணாமலை நகர் மற்றும் 10 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

 

சிதம்பரம் நகராட்சிக்கு மட்டும் ரூ.214 கோடிக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரம் விரிவாக்கத்திற்காக 4 வழி புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புறவழிச்சாலை அமைத்து முடியும் போது புதிய பேருந்து நிலையம் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

 

சிதம்பரம் நகர பழைய பேருந்து நிலையமும் சீரமைக்கப்படவுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு தேவைகள், பணி சீரமைப்பு நடைபெற்று வருகிறது. தேவைக்கு அதிகமான பணியிடங்கள் சீரமைப்பும், தகுதிக்கேற்ற பணியிடங்கள் குறித்து சீரமைப்பு பணியும், தகுதி வாய்ந்த மருத்துவர்கள் நியமனமும் நடைபெற்று வருகிறது. அது இறுதி சான்றிதழ் வந்த பிறகு முழுமை பெற்ற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்படும். புதிய மருத்துவ வசதிகள் உருவாக்கப்படும். தற்போது ரூ.10 கோடிக்கு புதிய கட்டடங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் 36 இடங்களில் சுமார் 560 விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு எந்த எந்த மண்ணில் எந்த பயிர் பயிரிடுவது, என்ன தேவை என வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. முதல்வர் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்ததன் பலனாக சிறுதானிய பயிர்களை ஊக்குவிக்கும் திட்டம் உருவானது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதை கற்றுக்கொள்ள வேண்டும். நெல், காய்கறி, பழங்கள் ஆகியவற்றை மதிப்புக் கூட்டி விற்கும் போது கூடுதல் லாபம் கிடைக்கும். அடுத்தகட்டமாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தும் போது விவசாயிகள் இரட்டிப்பு லாபம் அடைவார்கள். இதற்கான பயிற்சியை விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை வழங்கவுள்ளது" என்றார்.

 

அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், சிதம்பரம் நகரமன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன், வட்டாட்சியர் செல்வக்குமார், நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மூத்த நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ஜேம்ஸ் விஜயராகவன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், மணிகண்டன், அசோகன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

foul language to passengers; Cancellation of license of private bus driver operator

 

கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.

 

அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கிய அமைச்சர் 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Minister MRK Panneerselvam gave education loans to students

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் முன்னோடி வங்கிகளுடன் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாம் மற்றும் தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். முகாமில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் தொழிற்கடனை வழங்கி பேசினார். 

 

அவர் பேசுகையில், “மாணவர்கள் தங்களது உயர்கல்வி அடைவதற்கு பொருளாதாரம் ஒரு மாபெரும் தடையாக உள்ளது. அதனால் மாணவர்களின் உயர்கல்வி கனவு தடைபட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் நலனின் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கிட அனைத்து கல்லூரிகள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து இந்த மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகின்றது. இந்த முகாமில் கலந்துகொண்டு கல்விக்கடன் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக கல்விக்கடன் வழங்கிட வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இன்றைய முகாமில் 153 மாணவர்களுக்கு ரூ.10.84 கோடி கல்விக் கடனும், பல்வேறு அரசு மானியக்கடன் திட்டங்களின் மூலம் 64 பயனாளிகளுக்கு ரூ.10:37 கோடி தொழிற்கடனும், மொத்தம் 217 பயனாளிகளுக்கு 21.21 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கெளரிசங்கர் ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ம. ராஜசேகர், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் க. பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்