Skip to main content

'இப்படியெல்லாம்கூட ஒரு தில்லுமுல்லா...'-அரசு மருத்துவரின் தவறை மேடையில் போட்டு உடைத்த அமைச்சர் மா.சு!

Published on 01/08/2022 | Edited on 02/08/2022

 

Minister Maa.su broke the government doctor's mistake on the stage!

 

அரசு மருத்துவர் ஒருவர் பணிக்கு வராமல் ஏமாற்றியதை பட்டவர்த்தனமாக மேடையில் போட்டு உடைத்துள்ளார் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

 

நிகழ்ச்சி ஒன்றில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ''அண்மையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் நடந்தது. அப்பொழுது ஒரு மருத்துவர் மீது புகார்கள் எழுந்தது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை நிபுணராக உள்ள மருத்துவர் முனுசாமி. சேலத்தைச் சேர்ந்தவர். இவர் அடிக்கடி பணிக்கு வராமல் இருப்பதாகவும், ஆனால் அவருக்கான வருகைப் பதிவேட்டில் யாரோ அவருக்காக கையெழுத்து இடுகின்றனர் என்றும் புகார் வந்தது. இதுதொடர்பாக மருத்துவத்துறை செயலாளரிடம் கூறிய நிலையில் அவர் அங்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வில் பெரிய அதிர்ச்சி கிடைத்தது. அவர் பணிக்கு வராத நாளுக்கு அவரது வருகை பதிவேட்டில் சி.எல் லீவ் எடுப்பதாக எழுதிவிட்டு, பின்னர் இரண்டு நாட்கள் கழித்து  CL- ஐ 'மு' எனத் தமிழில் அதாவது முனுசாமி என்பதாக மாற்றி விடுகிறார்கள். மருத்துவர்கள் இவ்வளவு கிரிமினல்களாக யோசிக்கக் கூடாது. மக்களின் உயிரைக் காக்கும் கடவுளைப் போன்றவர்கள் மருத்துவர்கள்.

 

பணிக்கு வராத காலத்தில் பணிக்கு வரவில்லை என்று ஒத்துக் கொண்டால் போதும். வேண்டாம் நான் தனியாக ப்ராக்டிஸ் செய்கிறேன் என்று சொன்னால் விட்டுவிட்டுப் போய்விடுங்கள். நாங்கள் கேட்க மாட்டோம். ஆனால் அரசு வேலையும் வேண்டும், பணிக்கும் வரமாட்டேன் என்றால் எப்படி. கோவை அரசு மருத்துவமனையில் முனுசாமி என்பவர் இதய சிகிச்சை நிபுணராக உள்ளார், அவரிடம் போனால் நமக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பி வரும் மக்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் இப்படி தில்லுமுல்லு செய்வது என்பது சரியான காரணம் அல்ல'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.