Skip to main content

ஓ.பி.எஸ். அமைச்சராக இருந்தபோது போரூர் ஏரியை மூட முயற்சித்தனர் - மா.சு. பதிலடி

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

Minister Ma. Subramaniyan inspect's porur river

 

போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருக்கிறது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (16.07.2021) அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த அறிக்கையில், ‘பிளாஸ்டிக் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளைத் தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் நச்சுக் காற்று காரணமாக அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகக் கவசம், மருந்து, மாத்திரைகள், ஊசி, கையுறைகள், மருத்துவ உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்தையும் தனித்தனியாகப் பிரித்து உரிய அமைப்பிடம் கொடுக்க வேண்டியது மருத்துவமனைகளின் கடமை. 

 

நேற்று முன்தினம் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. எனவே ஏரியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டுமென்றும், மருத்துவக் கழிவுகளைத் தரம் பிரித்துக் கையாள மருத்துவமனைகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி அந்த ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று காலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மதுரவாயில் எம்.எல்.ஏ. கணபதி ஆகியோர் போரூர் ஏரியை ஆய்வு செய்தனர். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “போரூர் ஏரி மொத்தம் 252 ஏக்கர் அரை ஏக்கர் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 200 ஏக்கர் குப்பை கொட்டும் இடமாகவும் மரம், செடிகள் வளர்ந்த இடமாகவும் மாறியுள்ளது. அனைத்து துறைகளையும் சேர்த்து இங்குள்ள மரம், செடி, கொடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு முழுமையாக காம்பவுண்டு சுவர் அமைக்கப்படும். போரூர் ஏரியில் வெளி வாகனங்களிலிருந்து குப்பைகள் கொட்டுவதைத் தடுப்பதற்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். போரூர் ஏரி முழுமையாக பாதுகாக்கப்படும். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும். குப்பைகளை யார் கொட்டினாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

 

முன்னதாக காலை 10 மணிக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால்தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

“பிரதமர் மோடி எனக்காக விட்டுக் கொடுத்தார்” - உண்மையை உடைத்த ஓபிஎஸ்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
OPS said that Prime Minister Modi has given up his constituency for me

பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை தமிழ்நாட்டில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதனை உண்மை தான் என்பது போல ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனையறிந்த அதிமுகவினர் மேலும் ஒ.பன்னீர்செல்வங்களை சுயேட்சை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அறந்தாங்கி நகரில் அண்ணாசிலை அருகே பேசும் போது, நான் போட்டியிடுவதாக சொன்னதும் எங்கிருந்தோ ஒ.பன்னீர்செல்வங்களை அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் எல்லாம் "ஒ.பன்னீர்செல்வம் இல்லை, நான் மட்டும் தான் ஓ.பன்னீர்செல்வம்". முதலமைச்சர், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவன் நான். புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி பறிபோனதும் அம்மா என்னை அழைத்து தொகுதியை மீட்க உண்ணாவிரதம் இருக்கச் சொன்னார். ஆனால், இந்த முறை பிரதமரிடம் நேரடியாகச் சொல்லி மீட்டுத்தருவேன். இந்த ராமநாதபுரம் தொகுதி பிரதமர் மோடி நிற்க வேண்டிய தொகுதி அவர் என்னை போட்டியிட அனுப்பி வைத்திருக்கிறார். எனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் என்றார்.