Advertisment

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் அரசு சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இன்று சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனைகளில் சமத்துவ பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா . சுப்பிரமணியன் (13.1.2022) மக்கள் உயிர்காக்கும் மருத்துவர்களுடன், செவிலியர்களுடன் மற்றும் இதர முன்கள பணியாளர்களுடன் கலந்து கொண்டு விழாவினைசிறப்பித்தார்.